நீரின்றி அமையாது உலகு.. திடீரென்று தமிழில் பேசிய மோடி.. சுதந்திர தின உரையில் ஆச்சர்யம்!
பிரதமர் மோடி, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கும்போது நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசினார்.
டெல்லி: பிரதமர் மோடி, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கும்போது நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசினார்.
இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.
பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்கள் மரியாதை அளித்தனர். இதையடுத்து செங்கோட்டையில் முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இன்று அணிவகுப்பு நடக்க உள்ளது.
காஷ்மீரை வேகமாக முன்னேற்றுவோம்.. இனி பெரிய மாற்றம் வரப்போகிறது.. பிரதமர் மோடி சபதம்!
தமிழில் பேசினார்
தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உறையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இந்த நிலையில் அவர் திடீர் என்று ஒருமுறை தமிழில் பேசினார். சுதந்திர தின உரையில் திருக்குறளை எடுத்துக்காட்டி கூறிய பிரதமர் மோடி, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கும்போது நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசினார்.
வேறு என்ன
ஒரே நாடு, ஒரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம். நீர் தேவையை பூர்த்தி செய்து. தண்ணீர் பஞ்சத்தை போக்குவோம். நீர் திட்டங்களுக்காக ரூபாய் 3.50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம். இதற்காக திட்டங்களை கொண்டு வருவோம்
கூறியது என்ன
ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் நாங்கள் தண்ணீர் கொண்டு செல்ல போகிறோம். அனைவருக்கும் சுத்தமான குடிநீர் என்பதே எங்களின் அடுத்த இலக்கு. அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து நாம் கவலை அடைய வேண்டும். நாட்டில் ஊழல் பெரிய வியாதி போல வளர்ந்து இருக்கிறது.
என்ன திட்டம்
முதலில் நாம் வறுமையை ஒழிக்க வேண்டும். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதால் இது சாத்தியமாகும். இதற்காக நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இனியும் நிறைய திட்டங்களை அறிமுகம் செய்வோம். எந்த விதமான திட்டங்களை கொண்டு வரவும் நாங்கள் தயாராக இருக்கிறோம், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.