டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முத்தலாக் தடை சட்டம்.. இஸ்லாமிய பெண்களின் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது.. மோடி பெருமிதம்!

முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டதன் மூலம் பெண்கள் விடுதலை அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டதன் மூலம் பெண்கள் விடுதலை அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.

பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்கள் மரியாதை அளித்தனர்.தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உறையியற்றினார்.

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கியதால் மக்கள் கொண்டாட்டம்.. சுதந்திர தின உரையில் மோடி மகிழ்ச்சி! காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கியதால் மக்கள் கொண்டாட்டம்.. சுதந்திர தின உரையில் மோடி மகிழ்ச்சி!

என்ன பேசினார்

என்ன பேசினார்

பிரதமர் மோடி தனது உரையில், 2014 தேர்தலுக்கு பின் மக்கள் எதிர்பார்த்ததை விட அதிக மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறோம். நாடு வேகமாக வளர்ந்து வருகிறது நாட்டில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். முத்தலாக் தடை சட்டம் மூலம் இஸ்லாமிய பெண்கள் விடுதலை அடைந்துள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நீர் மேலாண்மை

நீர் மேலாண்மை

நீர் மேலாண்மைக்காக நலத்திட்டங்கள் நிறைய கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகள் நாட்டில் மகிழ்ச்சியாக உள்ளனர். கடந்த ஐந்து வருடங்களில் மருத்துவ துறை பெரிதாக வளர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான அநீதிகள் தடுக்கப்பட்டு உள்ளது.

சிறுபான்மையினர்

சிறுபான்மையினர்

சிறுபான்மையினரை முன்னேற்ற நிறைய திட்டம் இருக்கிறது. ஆதிவாசிகளை முன்னேற்ற திட்டமிட்டுள்ளோம். வரும் நாட்களில் செயல்படுத்துவோம். எங்களுடைய பணிகள் நாட்டில் நிறைய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மக்கள் எங்களை முழுதாக நம்புகிறார்கள். இந்தியா மாற முடியும் என்று நம்புகிறார்கள்.

தேர்தல் மோதல்

தேர்தல் மோதல்

நாம் யோசிக்க தொடங்கிவிட்டோம். 130 கோடி மக்களும் சேர்ந்து செயல்பட தொடங்கிவிட்டோம். தேர்தலில் எந்த கட்சியும் யாருடனும் மோதவில்லை. மக்கள் தங்கள் கனவுகளுக்காக தீமைகளை எதிர்த்து போராடி வருகிறார்கள்.
மக்களிடம் சுயமரியாதையும், இந்தியர் என்ற உணர்வும் அதிகமாம் ஆகியுள்ளது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Independence day: Triple Talaq Ban gives me so much happy says PM Modi in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X