டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐநா மீட்டிங் நடக்கும் அதே நாளில் திக்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் இந்தியா? சீனாவுக்கு வார்னிங்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலிங் மீட்டிங் இன்று நடக்க உள்ள நிலையில் இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை மாற்ற போவதாக பயமுறுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    UN on Kashmir issue | காஷ்மீர் பிரச்சனையில் ஐநாவின் ரகசிய ஆலோசனை

    டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலிங் மீட்டிங் இன்று நடக்க உள்ள நிலையில் இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை மாற்ற போவதாக பயமுறுத்தி உள்ளது.

    காஷ்மீர் பிரச்சனை தற்போது உலக அளவில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டது பெரிய சர்ச்சையாகி இருக்கிறது.

    இன்று காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த உள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என்று சீனா மற்றும் பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை வைத்தது.

    அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாற வாய்ப்பு.. ராஜ்நாத் சிங் அதிரடி கருத்து அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாற வாய்ப்பு.. ராஜ்நாத் சிங் அதிரடி கருத்து

    ஏற்பு

    ஏற்பு

    இரண்டு நாடுகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்த விசாரணை நடக்க உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் ரகசியமாக நடக்க உள்ளது. இதில் இந்தியாவின் செயல் சரியா தவறா என்று முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்று மாலை என்ன விதமான அறிவிப்பு வேண்டுமானாலும் வெளியாகலாம்.

    அணு ஆயுதம்

    அணு ஆயுதம்

    இந்த நிலையில் தற்போது அதிரடி திருப்பமாக இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் அணு ஆயுத கொள்கை மாறலாம். அணு ஆயுத பயன்பாடு இல்லை என்பதுதான் இப்போது கொள்கை. எதிர்காலத்தில் அது மாற வாய்ப்பு இருக்கிறது

    மோசம்

    மோசம்

    அணு ஆயுதத்தை பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை சூழ்நிலையை பொறுத்து முடிவை எடுப்போம். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.அனைத்திற்கும் தயாராக இந்தியா இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

    விவகாரம்

    விவகாரம்

    காஷ்மீர் விவகாரத்தில் சீனாவும், பாகிஸ்தானும் ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை எடுக்க முயன்று வருகிறது. ஆனால் இந்தியாவோ நாங்கள் எப்போதும் போருக்கு தயார் என்ற மனநிலையிலேயே முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில்தான் தற்போது ராஜ்நாத் சிங்கும் அணு ஆயுதம் குறித்து பேசி இருக்கிறார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலிங் மீட்டிங் இன்று நடக்க உள்ள நிலையில் இந்தியா இப்படி பேசி உள்ளது.

    சீனாவிற்கு வார்னிங்

    சீனாவிற்கு வார்னிங்

    சீனாவிற்கு வார்னிங் கொடுக்கும் வகையில் இந்தியா இந்த நடவடிக்கையை எடுக்கிறது என்றும் கூறுகிறார்கள்.ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது. இந்த ஐந்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தியா இப்படி செய்வதாக கூறுகிறார்கள்.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    ஆனால் இதில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இன்று மாலை இதே பேட்டியை சீனா இந்தியாவிற்கு எதிராக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அது இந்தியாவிற்கு எதிராகவே திரும்ப வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவின் புதிய அணு ஆயுத திட்டத்தால் ஆசியாவில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    India Atomic Bomb announcement may have some connections with the UN Security Council meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X