இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே அக்.12-ல் 7-வது கட்ட பேச்சுவார்த்தை
டெல்லி: இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே அக்டோபர் 12-ந் தேதி 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
லடாக் கிழக்கு எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவின் ஊடுருவல் முறியடிப்பு நடவடிக்கையில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
சீனா தரப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதன்பின்னர் இந்தியா- சீனா இடையேயான பல்வேறு நிலைகளில் 6 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
சீனாவின் மால்டோ பகுதியில் கடந்த செப்டம்பர் 21-ந் தேதி 6-வது கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. பல மணிநேரங்கள் இரவிலும் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. இந்திய தரப்பில் லெப்.ஜெனரல் ஹரீந்தர் சிங், பிஜிகே மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரியங்கா காந்தியின் குர்தாவை தொட யார் தைரியம் தந்தது..? உ.பி. போலீஸை விளாசும் பாஜக பெண் தலைவர்..!
இதன்பின்னர் இந்தியா- சீனா கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், எல்லையில் கூடுதல் படை குவிப்பை இருநாடுகளும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வரும் 12-ந் தேதி 7-வது கட்டமாக இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.