குல்பூஷன் ஜாதவ் மேல்முறையீடு விவகாரம்- பாகிஸ்தான் பொய்யுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்
டெல்லி: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷன் ஜாதவ் மேல்முறையீடு விவகாரத்தில் அந்த நாடு பொய்யான தகவலை வெளியிட்டு வருவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் வேவு பார்த்தார் குல்பூஷன் ஜாதவ் என்பது அந்நாட்டின் புகார். இது தொடர்பான வழக்கில் குல்பூஷனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து மத்திய அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் குல்பூஷன் ஜாதவின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனை அடுத்து குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் அனுமதி மறுத்து வருகிறது.
சென்னையில் மத்திய குழு- கொரோனா பாதிப்பு குறித்து இன்று ஆய்வு நடத்துகிறது
இதனிடையே குல்பூஷன் ஜாதவ், மேல்முறையீடு செய்யவே விரும்பவில்லை என பாகிஸ்தான் ஒரு தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது பாகிஸ்தானின் அப்பட்டமான பொய் பிரசாரம் என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.