சுதந்திர தினத்தன்று வாலாட்டிய பாகிஸ்தான்.. பாக். ராணுவ துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியா பதிலடி
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370 அண்மையில் மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது. இதனால் காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் சுதந்திர தினத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் எப்போது வேண்டுமானாலும் எல்லையில் ஊடுருவலாம் என்ற தகவலால் இந்திய படைகள் தயார் நிலையில் இருந்தன.
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் இன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் சுதந்திர தினமான இன்று பூஞ்ச் மாவட்டம் கேஜி துறையில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.