புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி.. 40 வீரர்களுக்கு 200 தீவிரவாதிகள்.. வெகுண்டெழுந்த இந்தியா!
Recommended Video
டெல்லி: புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்களை இழந்த நிலையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய விமான படை தாக்குதல் நடத்தி தக்க பதிலடியை கொடுத்தது.
ஜம்மு- காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 75-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 2500 வீரர்கள் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி 350 கிலோ வெடிப்பொருட்களுடன் வீரர்களின் வாகனத்தின் மீது மோதினான்.
அப்போது வெடித்து சிதறியதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. 40 வீரர்களை கரித் துண்டுகளாக பெற்றது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஒத்திகை
இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கூறுகையில் முழு சுதந்திரத்தை கொடுக்கிறேன். இந்தியா மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போர் நடத்தும்விதமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் எல்லை கோட்டு பகுதியில் ஒத்திகை நடத்தி வந்தன.
தீவிரவாத முகாம்கள்
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 12 எண்ணிக்கையிலான மிராஜ் ரக விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் 1000 கிலோ வெடி பொருட்களை தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது வீசியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.
வெடிப்பொருள்
இந்த சம்பவத்துக்கு நாடெங்கும் பாராட்டுகள் குவிகின்றன. மேலும் 40 வீரர்களுக்கு பதிலாக 200- 300 தீவிரவாதிகளை இந்தியா அழித்தது. அதோடு 350 கிலோ வெடிப்பொருளுக்கு பதிலாக 1000 கிலோ வெடிப்பொருளை இந்தியா பயன்படுத்தியது.
பேய்
நட்புறவு காட்டும் இடத்தில் இந்தியா தாய்க்கு இணையாகவும் எதிரியாக பாவிக்கும் இடத்தில் பேய்க்கு இணையாகவும் இந்தியா மாறும் என்பதற்கு இது இரண்டாவது உதாரணம் ஆகும். இந்த தாக்குதல் மூலம் 40 வீரர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.