சபாஹர் விவகாரம்-சர்வதேச அரங்கில் மரியாதையை இழந்து வருகிறது இந்தியா-மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
டெல்லி: சர்வதேச அரங்கில் இந்தியா தமது வலிமையையும் மரியாதையும் இழந்து வருகிறது என்று மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
ஈரானின் சபாஹர் துறைமுகத் திட்டத்தில் இருந்து இந்தியா நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்துக்குரியதானது.
ஐரோப்பிய. ஒன்றியத்துடன் தடை இல்லாத வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்ற காலக்கெடு எதுவும் இல்லை- மத்திய அரசு
ஆனால் மத்திய அரசு இந்த தகவல்களை நிராகரித்திருக்கிறது. தற்போது இலங்கையின் கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்தும் இந்தியா விலக்கப்படும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை முன்வைத்து மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் சர்வதேச வியூகம் தோல்வி அடைந்துவிட்டது. சர்வதேச அரங்கில் இந்தியா தமது வலிமையையும் மரியாதையையும் அனைத்து இடங்களிலும் இழந்து நிற்கிறது; இதனை சரி செய்ய மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என கூறியுள்ளார்.