நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா?
Recommended Video
டெல்லி: ஈரானிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்க முடிவு செய்தால், அமெரிக்கா இந்தியா மீது கடுமையான பொருளாதார தடையை விதிக்க வாய்ப்புள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா சென்று வருடம் இரண்டு பொருளாதார தடைகளை விதித்தது.
அதன்பின் இந்த மாத தொடக்கத்தில் மூன்றாவது பொருளாதார தடையை விதித்தது. ஈரானுடன் உலக நாடுகள் எதுவும் எண்ணெய் வர்த்தகம் செய்ய கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
டிரம்ப் vs மோடி.. முதல்முறை அமெரிக்காவை எதிர்க்க துணியும் இந்தியா.. ஈரானுக்கு கைகொடுக்க பிளான்!
எச்சரிக்கை விதித்தது
அதன்படி ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்தால் வர்த்தகம் செய்யும் நாடுகளும் பொருளாதார தடையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று அமெரிக்கா கூறியது. சீனா, ரஷ்யாவிற்கு கூட அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்து இருந்தது. இதற்கு 98% நாடுகள் தற்போது வரை ஒப்புக்கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
ஏற்கனவே நிறுத்திவிட்டது
இதனால் ஏற்கனவே சீனா, துருக்கி, ஆசியாவில் உள்ள சிறிய நாடுகள் எல்லாம் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது. இந்தியாவும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்த மாத தொடக்கத்திலேயே நிறுத்திவிட்டது. இதனால் ஈரான் தற்போது உலகில் தனித்து விடப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியா
இந்த நிலையில்தான் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இந்தியா ஈரானிடம் இருந்து பெட்ரோல் டீசல் வாங்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. இந்த மாதம் ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் போட வாய்ப்புள்ளது. அதன்பின் எப்போதும் போல இந்தியா பெட்ரோல் டீசல் வர்த்தகத்தை நடத்தும் என்று கூறுகிறார்கள். இதுதான் அமெரிக்காவிற்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது.
என்ன கோபம்
இந்தியாவின் இந்த முடிவால், அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடையை விதிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அமெரிக்காவின் தடை உலகில் எதிர்க்கும் ஒரே நாடாக இந்தியா மாற வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவை கண்டிக்கும் பொருட்டு, இந்தியா மீது பொருளாதார தடையை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முயலலாம் என்று கூறுகிறார்கள்