இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,58,089 பேருக்கு கொரோனா பாதிப்பு-385 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,58,089 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் 385 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டியதாக பதிவாகி வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 13,13,444 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதில் 2,58,089 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் இதுவரை மொத்தம் 70.37 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1,51,740 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,52,37,461. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைதல் 94.27% ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் மற்றொரு லாக்டவுனா?.. அடங்க மறுக்கும் கொரோனா.. இந்த நாளிலும் முழு ஊரடங்கு போட வாய்ப்பு!
Recommended Video
இந்தியாவில் ஓமிக்ரான் எனும் உருமாறிய வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 8,209 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய நாளைவிட 6.02% அதிகமாகும். நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 16,56,341. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 157.20 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.