இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா பாதிப்பு- 383 பேர் உயிரிழப்பு
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 383 பேர் நேற்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,03,18,726. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் 47,22,782 பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பில் இருந்து 20,70,30,233 பேர் மீண்டுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒருநாளில் மட்டும் 1,20,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 1,927 பேர் கொரோனாவால் நேற்று அமெரிக்காவில் உயிரிழந்தனர்.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் நேற்று 31,564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 3-வதாக துருக்கியில் 29,338 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. கொரோனா மரணங்களில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக ரஷ்யாவில் நேற்று 812 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் 484 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,964 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் நேற்று மட்டும் 383 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று 34,167 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
நாட்டில் தற்போதைய நிலையில் 3,01,989 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 3,27,83,741 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,45,768. நாட்டில் இதுவரை 82,65,15,754 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேரளாவில் அதிக கொரோனா பாதிப்பு தொடர்ந்து பதிவாகி வருகிறது. கேரளாவில் நேற்று 15,768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அடுத்ததாக மகாராஷ்டிராவில் 3,131 பேருக்கும் தமிழகத்தில் 1647 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மிசோரம் மாநிலத்தில் 1,731 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதியானது.