இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 43,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 640 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 5 மாதங்களுக்குப் பின்னர் நேற்று கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து 30 ஆயிரத்துக்கும் கீழே இருந்தது.
நாட்டில் நேற்று முன்தினம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 29,689 ஆகவும் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 415 ஆகவும் இருந்தது. கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43,654 ஆக அதிகரித்துள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமையன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 41,678 பேர் குணமடைந்தும் உள்ளனர். இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,99,436 (ஆக்டிவ் கேஸ்கள்). நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,06,63,147.
மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்
இந்தியாவின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,22,022. நாட்டில் இதுவரை மொத்தம் 44,61,56,659 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.