கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி.. கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் மரணம்
டெல்லி: கர்நாடக மாநிலம் கல்பர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியாகியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியான முதல் இந்தியர் இவர்தான்.
Recommended Video
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கியுள்ள கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு கல்பர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானார். இவர் பிப்ரவரி 29ம் தேதி சவூதி அரேபியாவிலிருந்து உம்ரா பயணத்தை முடித்து விட்டுத் திரும்பியிருந்தார்.
உம்ராவை முடித்து விட்டு ஹைதராபாத் திரும்பிய அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது எந்த அறிகுறியும் தெரியவில்லை. மார்ச் 5ம் தேதி அவரை கல்பர்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது அவருக்கு ஆஸ்த்மா பிரச்சினையும், ரத்த அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
கொடூர கொரோனா.. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு.. கேரளாவுக்கு முதலிடம்
இதையடுத்து அவரை ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றினர். இந்த நிலையில் இன்று இரவு 10. 30 மணியளவில் அந்தப் பெரியவர் மரணமடைந்தார். தற்போது அந்தப் பெரியவரின் குடும்பம் முழுமையும் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுதான் ஒருவர் உயிரிழந்துள்ளார்.