5 நாட்களில் இந்தியாவில் 102% ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் கடந்த 5 நாட்களில் மட்டும் கொரோனாவின் பாதிப்பு 102% ஆக அதிகரித்திருக்கிறது.
Recommended Video
இந்தியாவில் கடந்த சில நாட்களில் மட்டும் கொரோனாவின் பாதிப்பும் உயிரிழப்பும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசைப்பட்டியல் தாறுமாறாக இடம்பெயர்ந்துள்ளன.,
மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. 2-வது இடத்தில் இருந்த கேரளா 4-வது இடத்துக்கு போய்விட்டது. இப்போது தமிழகமும் புதுடெல்லியில் 2-வது ,3-வது இடங்களில் உள்ளன.
மார்ச் 10-ந் தேதியன்று இந்தியாவில் மொத்தமே 50 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால் 10 நாட்களில் மார்ச் 20-ந் தேதி இது 196 ஆக அதிகரித்தது.
கொரோனா.. வரலாற்றை மாற்றும் நுண்ணிய வைரஸ்.. பகையை மறந்து கைகோர்க்கும் ரஷ்யா-அமெரிக்கா.. திருப்பம்!
இந்த நிலைமை மார்ச் 31-ல் படுமோசமாக தீவிரமடைந்திருக்கிறது. இந்தியாவில் மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி 1397 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மார்ச் 29-ந் தேதியன்று 1,024 பேராக இருந்த கொரோனா பாதிப்பு ஏப்ரல் 2-ந்தேதியன்று 2.069 ஆக அதிகரித்திருக்கிறது. 5 நாட்களில் 102% ஆக கொரோனாவின் பாதிப்பு உயர்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.