இந்தியாவில் 24 மணிநேரத்தில் 38,722 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 94 லட்சத்தை தாண்டியது!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38,722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் நாள்தோறும் 1.25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38,722 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,31,692 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 443 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,37,139 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,46,952 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 45,333 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜகவில் ஷாக்.. கொரோனா பாதித்த பெண் எம்எல்ஏ காலமானார்.. கடைசிவரை போராடியும் காப்பாற்ற முடியாத சோகம்
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 88,47,600 ஆகவும் உள்ளது.