இந்தியாவில் 74,442 பேருக்கு புதிய கொரோனா தொற்று - 903 பேர் மரணம்
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,23,816 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனாவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 74,442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 903 பேர் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,23,816 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவிற்கு 1,02,685 பேர் மரணமடைந்துள்ளனர். 55,86,704 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுவதும் மூன்றரை கோடி மக்களை பாதித்துள்ளது. 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவை கட்டுப்படுத்த பல கட்டங்களாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் தற்போது 5ஆம் கட்டமாக லாக்டவுன் தளர்வுகள் அமலில் உள்ளன. ரயில், பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தினசரி கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு இடையே காரில் வலம் வந்த ட்ரம்ப் - ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 74,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 903 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,23,816 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவிற்கு 1,02,685 பேர் மரணமடைந்துள்ளனர். 55,86,704 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,02,685 ஆக உயந்ந்துள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.