உலகிலேயே ''MeToo'' பற்றி அதிகம் படித்தது இந்தியர்கள்தான்.. முதலிடம் பிடித்த இந்திய நகரம் எது?
உலகிலேயே இந்தியர்கள்தான் ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் குறித்து அதிகம் தேடி தேடி படித்து இருக்கிறார்கள்.
Recommended Video
டெல்லி: உலகிலேயே இந்தியர்கள்தான் ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் குறித்து அதிகம் தேடி தேடி படித்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் இந்த ஹேஷ்டேக் நிறைய சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தி திரைப்பட உலகில் தனுஸ்ரீதத்தா கொடுத்த புகாரும், தமிழ் சினிமாவில் சின்மயி கொடுத்த புகாரும் பெரிய புயலை கிளப்பி இருக்கிறது. இதன் காரணமாக உலக அளவில் மீடு மீண்டும் விவாத விஷயமாக மாறி உள்ளது.
[நேதாஜி இன்னும் உயிரோடு இருக்கிறாரா? விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு]
இந்தியாவில் அதிகம்
இந்த நிலையில் உலகிலேயே மீடு குறித்து அதிகம் பேசியது இந்தியர்கள்தான். ஆம் இந்தியாவில்தான் பலர் மீடு குறித்து போஸ்ட் போட்ட இருக்கிறார்கள். அதேபோல் அதிக நபர்கள் கூகுளில் மீடு குறித்து சர்ச்சை செய்து இருக்கிறார்கள்.
குறைவு
இந்த மீடு குற்றச்சாட்டுகள் முதலில் வைக்கப்பட்ட அமெரிக்காவில் கூட இந்த அளவிற்கு இது வைரல் ஆகவில்லை. அமெரிக்காவில் குறைந்த அளவில்தான் இதுகுறித்து சர்ச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்து அமெரிக்காவில்தான் அதிக பேர் இந்த டேக்கை தேடி தேடி படித்து இருக்கிறார்கள்.
எப்படி கண்டுபிடித்தனர்
இதற்காக கூகுள் வீடியோ வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் இந்த வார்த்தையை சர்ச் செய்து இருக்கிறார்கள் என்பதால் வைத்து, மீடு அந்த நாட்டில் எவ்வளவு டிரெண்ட்ஆகியுள்ளது என்று ஆராய்ந்து உள்ளது. அதற்கு ஏற்றார் போல அந்த நாடுகளில் விளக்கு எரியும். அதன்படி இந்தியாதான் இதில் அதிக வெளிச்சமாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
சென்னை மற்றும் பெங்களூர்
உலகிலேயே மும்பை, பெங்களூர் , டெல்லி, சென்னை ஆகிய நான்கு நகரங்களில்தான் அதிக பேர் இதை பற்றி படித்து இருக்கிறார்கள். இது இந்திய அளவில் வந்த முடிவு அல்ல உலக அளவில் எடுக்கப்பட்ட முடிவு. உலக அளவில் மும்பையில் அதிக பேர் இதை பற்றி படித்துள்ளனர். சென்னைக்கு இதில் 4வது இடம்.