நாக்கு காணிக்கை செலுத்தியது வீண் போகலை.. தெலுங்கானாவில் யார் ஆட்சி.. பரபர எக்சிட் போல்
Recommended Video
டெல்லி: தெலுங்கானாவில் மீண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியே மலரும் என இந்தியா டுடே எக்சிட் போல் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தது. மொத்தம் 119 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலம் உருவாக போராடிய சந்திரசேகர ராவ் முதல்வராக கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு ஆட்சியில் அமர்ந்தார்.
விரைவில் தேர்தல்
இந்த மாநில சட்டசபை பதவிக் காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு உள்ளது. எனினும் சந்திரசேகர ராவ் ஆட்சியை கலைத்து விட்டு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரினார்.
எக்சிட் போல்
அடுத்த முதல்வர் வரும் வரை அவரை ஆட்சியில் இருக்குமாறு அந்த மாநில ஆளுநர் கேட்டுக் கொண்டார். அதன்பேரில் அவர் முதல்வராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று நடந்து முடிந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து இந்தியா டுடே எக்சிட் போல் நடத்தியது.
தெலுங்கு தேசம் ஆட்சி
அதில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியே ஆட்சியை பிடிக்கும் என்றும் அக்கட்சி 79 முதல் 91 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறுகிறது. அது போல் காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கூட்டணி 21 முதல் 33 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது.
நாக்கை அறுத்து காணிக்கை
பாஜக 1 முதல் 3 தொகுதிகளையும் பிற கட்சிகள் 4 முதல் 7 தொகுதிகளையும் வெல்லும் என எக்சிட் போல் கூறுகிறது. சந்திரசேகர ராவே மீண்டும் முதல்வராக வர வேண்டும் என அக்கட்சி தொண்டர் ஒருவர் நாக்கை அறுத்து காணிக்கையாக போட்டது குறிப்பிடத்தக்கது.