டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 14,378ஆக உயர்வு.. பலி எண்ணிக்கை 480 ஆனது

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் சனிக்கிழமை நிலவரப்படி கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்துவிட்டது. பலி எண்ணிக்கை 480 ஆனது.

கொரோனா வைரஸ் கடந்த 4 மாதங்களாக உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தியாவை பொருத்தமட்டில் 2 மாதங்களாக கொரோனா தாக்கம் நிலவி வருகிறது.

India Total cases rise to 14,378; death toll at 480

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் பாதித்தோர் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்தது. அதுபோல் பலியானோர் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துவிட்டது.

குஜராத்தில் வெள்ளிக்கிழமை 92 பேருக்கு கொரோனா பாதித்ததால் அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 1,021 ஆனது. அது போல் மகாராஷ்டிராவில் 3,323 பேருக்கும், டெல்லியில் 1,707 பேருக்கும், தமிழகத்தில் 1,323 பேருக்கும், ராஜஸ்தானில் 1229 பேருக்கும் மத்திய பிரதேசத்தில் 1310 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சி தந்த காண்டாக்ட் டிரேசிங்.. ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா.. தஞ்சையில் என்ன நடந்தது? அதிர்ச்சி தந்த காண்டாக்ட் டிரேசிங்.. ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா.. தஞ்சையில் என்ன நடந்தது?

மும்பையில் தாராவியில் மட்டும் 101 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

English summary
Coronavirus in India total cases rise to 14,378 and death toll rises to 480.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X