எல்லையில் போர் பதற்றம்.. இந்திய வான்வெளி ரொம்ப பிஸி.. ஆனால் பாக்.க்கு இன்னும் கிலி போகலை போல!
Recommended Video
டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலிலும் விமான போக்குவரத்தை இந்தியா தொடர்ந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானோ நேற்றைய தினம் நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்தை இன்னும் தொடங்கவில்லை.
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமான படையினர் நேற்று முன் தினம் வான் வழித் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் போர் விமானங்களை எல்லை தாண்டி பறக்கவிட்டது.
இதையடுத்து அந்த விமானங்களை இந்திய விமான படை சாதுர்யமாக துரத்தி விட்டது. மேலும் வான்வெளியில் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு கருதி இந்தியாவில் உள்ள 8 விமான நிலையங்கள் மூடப்பட்டன.
அதுபோல் பாகிஸ்தானும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் இந்தியா தனது விமான போக்குவரத்தை நேற்றைய தினமே மீண்டும் தொடங்கியது.
Current Commercial Air Traffic Over Conflict Zone. pic.twitter.com/JQIrdMRhCK
— redandblackattack (@redanblacattack) February 27, 2019
இன்று வானிலை போக்குவரத்து எப்படி இருக்கிறது என்பது குறித்து ரேடார் படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவில் முழு போக்குவரத்து இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானிலோ விமானங்கள் பறக்கவில்லை.