ரூ.300 கோடியில் உடனடியாக ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம்
டெல்லி: இந்திய ராணுவத்துக்கு உடனடியாக ஆயுதங்களை கொள்முதல் செய்து கொள்வதற்கு 300 கோடி ரூபாய் வரை நிதியை பயன்படுத்தி கொள்ள, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு, பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பு அதிகாரம் அளித்துள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டிஏசி எனப்படும் தேசிய பாதுகாப்பு கொள்முதல்கவுன்சில் கூட்டம் புதன்கிழமை நடந்தது.. இந்த கூட்டத்தில் இந்தியாவின் வடக்கு எல்லைப்பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அங்கு எல்லைகளை பாதுகாப்பதற்கு ஆயுதங்களை வலுப்படுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து அவசர காலத்திட்டப்படி ரூ.300 கோடி ரூபாய் மதிப்பில் ஆயுதங்களை உடனே கொள்முதல் செய்து கொள்ள பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்திய ராணுவத்திற்கு அனுமதி அளித்தது. இந்த ஆலோசனை கூட்ட முடிவின் படி அடுத்த 6 மாதத்திற்குள் ஆர்டர் செய்து ஒரு வருடத்திற்குள் ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளது,.
உலகில் கொரோனாவால் நான்கே நாட்டில் தான் மோசமான பாதிப்பு.. அதில் இந்தியாவும் ஒன்று
Recommended Video
இந்திய ராணுவம் கிழக்கு லடாக்கில் சீனாவுடனான பதட்டமான சூழலுக்கு மத்தியில் கடந்த சில வாரங்களாக பல வகையான இராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் தளங்களை வாங்கத் தொடங்கியுள்ளது.