பாகிஸ்தான் "பேட்" படையினர் ஊடுருவல்.. இந்திய ராணுவம் முறியடிப்பு.. வீடியோ வைரல்
Recommended Video
டெல்லி: பாகிஸ்தானின் எல்லைத் தாக்குதல் படையினர் எல்லை வழியாக ஊடுருவலை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்திய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை எடுத்ததாலும் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாலும் பாகிஸ்தான் ஆத்திரத்தில் உள்ளது.
மேலும் இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதும் அதற்கு இந்திய ராணுவம் தக்க பதில் கொடுப்பதும் வாடிக்கையான ஒன்றுதான். கடந்த 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியது.
ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் இந்த நடவடிக்கைக்கு பின்னர், பாகிஸ்தானின் பேட் படையினர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.
#WATCH: Indian Army foiled an infiltration attempt by a Pakistani BAT(Border Action Team) squad along the Line of Control in Keran Sector of Kupwara in the 1st week of Aug. Bodies of eliminated Pakistani Army regulars/terrorists along with equipment seen in video.#JammuAndKashmir pic.twitter.com/kXKsJskVs0
— ANI (@ANI) September 9, 2019
மேலும் தீவிரவாதிகளின் உடல்களை வெள்ளைக் கொடிகளை காண்பித்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில் காஷ்மீரில் இந்திய எல்லையில் கேரன் பகுதியில் ஆகஸ்ட் மாதம் பாட் படையினர் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.