பூடானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது- 2 விமானிகள் பலி
டெல்லி: பூடானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
பூடான் நமது அண்டை நாடாக இருந்த போதும் அதன் எல்லைப் பகுதிகளை இந்திய ராணுவமே பாதுகாத்து வருகிறது. பூகோள ரீதியாக இப்பகுதி முக்கியத்துவமானது என்பதால் இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதனால்தான் பூடானின் டோக்லாம் பகுதியை சீனா ஆக்கிரமிக்கவிடாமல் இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் பூடானின் பூன்ப்ஹூலா உள்நாட்டு விமான நிலையம் அருகே இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மலை மீது மோதி நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
IMTART helicopter crashed near Younphula Domestic Airport today leading to two death for now. The cause of crash is suspected to be a foggy weather. pic.twitter.com/gpXOC3U1kP
— The Bhutanese (@thebhutanese) September 27, 2019
இந்த ஹெலிகாப்டரில் பயணித்த இந்திய விமானி மற்றும் பூடான் ராணுவ வீரர் ஆகியோர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மோசமான காலநிலை காரணமாக இவ்விபத்து நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.