டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா அதிரடி.. பாகிஸ்தானுக்குள் புகுந்து வெளுத்த "மிராஜ்".. தீவிரவாத முகாம்கள் காலி

Google Oneindia Tamil News

Recommended Video

    வெளுத்த 'மிராஜ்'..1000 கிலோ வெடி பொருட்கள்.. தீவிரவாத முகாம்கள் காலி.. வீடியோ

    டெல்லி: பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது கடுமையான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானதில் இருந்தே பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்த நிலையில்தான் இந்திய விமானப்படை பாகிஸ்தானில் அதிரடி தாக்குதல் நடத்தி இருக்கிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, பாகிஸ்தானின் பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தாக்குதல் நடத்தி உள்ளது.

    எப்போது தாக்குதல்

    எப்போது தாக்குதல்

    இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குல் நடத்தி இருக்கிறது.

    எங்கு தாக்குதல்

    எங்கு தாக்குதல்

    பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதிக்குள் புகுந்த இந்தியா ராணுவத்தின் போர்ப்படை விமானம் இந்த அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த தாக்குதலில் அங்கு இருந்த இரண்டுக்கும் மேற்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.

    அதிரடி

    அதிரடி

    இந்திய ராணுவத்தின் போர் விமானம் ஒன்று எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் இன்று காலையே புகார் அளித்து இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் அளித்துள்ள புகாரில், இந்தியா ராணுவத்தின் போர் விமானம் ஒன்று பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதிக்குள் வந்தது. ஆனால் பாகிஸ்தான் விமானப்படை வேகமாக செயல்பட்டு, பதிலடி கொடுத்தது என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    காலையில் புகார்

    காலையில் புகார்

    இந்திய ராணுவத்தின் போர் விமானம் ஒன்று எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் இன்று காலையே புகார் அளித்து இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் அளித்துள்ள புகாரில், இந்தியா ராணுவத்தின் போர் விமானம் ஒன்று பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதிக்குள் வந்தது. ஆனால் பாகிஸ்தான் விமானப்படை வேகமாக செயல்பட்டு, பதிலடி கொடுத்தது. என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    IAF: At 0330 hours on 26th February a group of Mirage 2000 Indian Fighter jets struck a major terrorist camp across the LoC and completely destroyed it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X