டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரோக்யா சேது ஆப்: கொரோனாவிடம் இருந்து உங்களை காக்கும் ஆப்.. பிரதமர் மோடியின் ஸ்பெஷல் கோரிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ளும் வகையில் மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பாக ஆரோக்யா சேது (Aarogya Setu) என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது. "ஆரோக்கியா சேது" மொபைல் செயலியை மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார் .

Recommended Video

    மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தது ஏன் தெரியுமா?

    இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இன்றோடு முடிய வேண்டிய ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இன்று மக்கள் முன் பேசிய பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார். இந்தியா முழுக்க மொத்தம் 10500 பேர் வரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Indian Governments Aarogya Setu App helps to save yourself from Coronavirus

    இதனால் தற்போது கொரோனாவிற்கு எதிராக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.இன்னொரு பக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கு தற்போது மத்திய அரசு தொழில்நுட்பத்தின் உதவியை நாடி உள்ளது. ஆம், இதற்காக மத்திய அரசு ஆரோக்யாசேது (AarogyaSetu) என்ற ஆப்பை வெளியிட்டுள்ளது.

    மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப துறை மூலம் இதற்கு ஆரோக்யாசேது (AarogyaSetu) என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்யா சேது (Aarogya Setu) ஆப் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டு உள்ளது.

    இது கொரோனாவில் இருந்து உங்களை காக்க உதவும். ஆம் இந்த ஆப் உதவியுடன் நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எளிதாக கொரோனா தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள முடியும். இது ஏஐ மூலம் செயல்பட கூடிய ஆப் ஆகும்.

    உங்கள் ஜிபிஎஸ் லொகேஷன், ப்ளூடூத், வைஃபை ஆகியவற்றின் மூலம் இது உங்கள் இருப்பிடத்தை வைத்து உங்களை எச்சரிக்கும். நீங்கள் இருக்கும் இடம், உங்களுக்கு அருகே இருக்கும் நபர்கள் மூலம் உங்களுக்கு எந்த அளவிற்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்பதை வைத்து இந்த ஆப் செயல்படும். இதை இந்த ஆப் கணித்து உங்களை எச்சரிக்கும். அதேபோல் அரசுக்கும் உடனுக்குடன் இது கொரோனா குறித்த தகவல்களை தெரிவிக்கும்

    இது மிக துல்லியமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதில் உங்களுக்கு கொரோனா குறித்த அறிகுறிகள், முக்கியமான அறிவிப்புகள், செய்திகள் கூட கிடைக்கும். வரும் நாட்களில் இந்த ஆப்பை மத்திய அரசு இ - பாஸ் போல பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இந்த ஆரோக்யா சேது ஆப் இந்தியாவில் மொத்தம் 11 மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது.

    உங்களுக்கு கொரோனா ஏற்பட்டால் அல்லது கொரோனா அறிகுறி இருந்தால் இதில் நீங்கள் தகவலை தெரிவிக்கலாம். அதன்மூலம் உங்களுக்கு அருகே உள்ளவர்களை இந்த ஆப் மொத்தமாக எச்சரிக்கை செய்யும். இப்படி பலரின் டேட்டாக்களை திரட்டி இந்த ஆப் மக்களுக்கு உதவும். இன்று மக்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி "ஆரோக்கிய சேது" மொபைல் செயலியை மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் .

    ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள் இயங்கு தளத்தில் இது இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

    English summary
    Indian Government's Aarogya Setu App helps to save yourself from Coronavirus infection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X