குடியுரிமை மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு தொடர்ந்துள்ளது.
1955-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது. இம்மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
அஸ்ஸாம், மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்கள் பற்றி எரிகின்றன. அங்கு நிலைமையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் சட்ட ரீதியாக இம்மசோதா செல்லாது; நீதிமன்றத்தால் இம்மசோதா நிராகரிக்கப்படும் என தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவு செய்துள்ளது. அரசியல் சாசனத்தின் 14-வது சரத்துக்கு எதிராக இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி இவ்வழக்கு தொடரப்பட உள்ளது.