ரன்வேயில் நிதின் கட்காரி சென்ற விமானம்.. பறப்பதற்கு ஓடிய கடைசி நிமிடம்.. விமானியின் சாமர்த்தியம்
டெல்லி: நாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்பட ஏராளமான பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் கடைசி நொடியில் மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
நாக்பூரில் இருந்து இன்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6E 636 என்ற விமானம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்பட ஏராளமான பயணிகளுடன் இன்று காலை டெல்லி புறப்பட்டது. விமானம் பறப்பதற்காக ரன்வேயில் வேகமாக சென்று கொண்டிருந்தது.
விமானம் பறக்க சில நிமிடங்களே இருந்த நிலையில் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி, விமானத்தில் பெரிய அளவில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து விமானத்தை அவர் பத்திரமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார். இந்த சம்பவத்தால் நாக்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எப்பவுமே பின்னாடி 50 பேர் இருப்பாங்க.. சும்மா கெத்தா இருக்கும்.. ஆனா இப்ப.. கதறி அழும் ரூட் தல!
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி 143 பயணிகளுடன் லக்னோவுக்கு புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை பத்திரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. இதனை இன்டிகோ நிறுவனமும் உறுதிபடுத்தியது.