கச்சா எண்ணை விலையேற்றத்திற்கு நடுவேயும், விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ள மத்திய அரசு!
டெல்லி: ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது, கச்சா எண்ணை விலை உயர்வு போன்றவற்றுக்கு மத்தியிலும், நாட்டில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் நரேந்திர மோடி, அரசு வெற்றி பெற்றுள்ளது.
நல்ல விவசாய அறுவடை காரணமாகவும், விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது.
மொத்த விலைவாசி குறியீடு என்பது, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5.13 சதவீதமாக இருந்தது. அது, இவ்வாண்டு இதே காலகட்டத்தில் 4.53 சதவீதமாக குறைந்துள்ளது.
நுகர்வோர் விலை குறியீடு இந்த காலகட்டத்தில் 3.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. பண வீக்கம் என்பது அதிகரித்துள்ளது என்றபோதிலும், எச்சரிக்கையாகும் அளவுக்கு இல்லை. கச்சா எண்ணை விலை அதிவேகமாக உயர்ந்து வந்தாலும் கூட, விலைவாசி கட்டுக்குள் இருப்பது கவனிக்கத்தக்கது.
இதை வைத்து பார்க்கும்போது, அரசுக்கு, விலைவாசி மீது முழு கட்டுப்பாடு உள்ளது உறுதியாகிறது. இது மக்களுக்கு நல்ல சிக்னல். 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மோடி திட்டமிட்டுள்ளதற்கு பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
[அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்த ஜிஎஸ்டி.. என்ன பலன் தெரியுமா?]
2014ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருக்கும்வரை, விலைவாசி உயர்வு அதிக அளவில் இருந்தது. இதன்பிறகு விலைவாசி தொடர்ச்சியாக கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
வெங்காயம், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றின் மீதான விலையேற்றம் என்பது சமீபகாலத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவே புள்ளி விவரங்கள் கூறுகின்றன.