டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?.. எல்லையில் பதற்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை- வீடியோ

    டெல்லி: தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கையால் பாகிஸ்தான் கடுங்கோபத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவை எப்படி பழிவாங்கலாம் என பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

    Intelligence units are saying that Terrorists are going to attack in South India?

    அதன் எதிரொலியாக தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    இதுகுறித்து ராணுவ கமாண்டர் எஸ் கே சைனி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தென்னிந்தியாவின் சில பகுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை தகவல்களை தெரிவித்துள்ளன.

    பயங்கரவாத செயல்கள் எதுவும் நேராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் குஜராத் சர் கிரீக் பகுதியில் படகுகள் கைப்பற்றப்பட்டன.

    இந்த படகுகளில் யார் வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தீவிரவாதிகள் யாரேனும் இந்திய எல்லையில் அரபிக் கடல் வழியாக ஊடுருவியிருப்பார்களா என விசாரணை நடத்தி வருவதாக சைனி தெரிவித்தார்.

    English summary
    Intelligence units are saying that Terrorists are going to attack in South India? There are tense in LOC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X