இன்னும் 2 மாதங்கள்தான்.. சர்வதேச விமான போக்குவரத்தை துவங்க போகிறோம்- மத்திய அமைச்சர்
டெல்லி: ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
மே 25 முதல் உள்நாட்டு விமானங்களை மீண்டும் தொடங்க உள்ள நிலையில், சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
இப்போதைக்கு வந்தே பாரத் விமானங்கள் இயக்கம் தொடரும், தற்போது வரை, அமைச்சகம் உள்நாட்டு விமான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது. வந்தே பாரத் மிஷனின் முதல் 25 நாட்களில், சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 50,000 குடிமக்களை அரசு திரும்ப அழைத்து வர முடியும்.
தற்போது, உள்நாட்டு நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கவனிப்போம். பின்னர் எதிர்காலத்தில் சர்வதேச விமானங்கள் குறித்து முடிவெடுப்பதற்காக இந்த பாடத்தை பயன்படுத்துவோம்.
தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு விமானத்தில் சென்றாலும் தனிமைப்படுத்தல் கட்டாயம்.. டிஜிபி உத்தரவு
தற்போது, உள்ளூர் விமான போக்குவரத்தில் சிக்கல் உள்ளது. இது அகற்றப்பட வேண்டும். ஆரோக்கிய சேது ஆப் பயணிகளுக்கு கட்டாயம் என கூறிய பிறகும், விமான பயணிகளை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்போவதாக கர்நாடகா உட்பட 6 மாநிலங்கள் அறிவித்துள்ளது ஏன் என்பது புரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே தமிழகத்திற்கு உள்நாட்டு விமானங்களை இயக்க வேண்டாம் என மாநில அரசு நேற்று கோரிக்கைவிடுத்திருந்தது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்தது.