நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்ட இண்டர்போல்
டெல்லி: சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை தெரிவிப்பதற்கான ப்ளூ கார்னர் நோட்டீஸை வெளியிட்டுள்ளது இண்டர்போல் அமைப்பு.
நித்தியானந்தா மீது கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் நடைபெற்று வரும் பலாத்கார வழக்கில் ஆஜராகாமல் வாய்தா வாங்கினார் நித்தியானந்தா.
குஜராத்தில் சட்டவிரோதமாக ஆசிரமத்தை ஏற்படுத்தி குழந்தைகளை அடைத்து வைத்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இதனடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது.
அத்துடன் நித்தியானந்தாவின் ஆசிரமும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் நித்தியானந்தாவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கனவே நித்தியானந்தா கைலாஷ் என்ற தனிநாட்டை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவில் இருந்து நித்தியானந்தா தப்பி இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில் நித்தியானந்தா இருப்பிடம் குறித்து தெரிவிப்பதற்கான ப்ளூ கார்னர் நோட்டீஸை சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் வெளியிட்டுள்ளது. குஜராத் போலீசார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.