அமலாக்கப் பிரிவு வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தது. இவ்வழக்கில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
டெல்லி திகார் சிறையில் இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்தது. அத்துடன் டெல்லி திகார் சிறையில் ப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா: இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆட்சி அமையும்.. புதுவை முதல்வர்
இவ்வழக்கில் தமக்கு ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து ப. சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இம்மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.