டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரிப்போர்ட் ரெடி.. ப. சிதம்பரத்திற்கு இரவோடு இரவாக நடந்த மெடிக்கல் செக் அப்.. இதுதான் காரணம்!

நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு இரவே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உச்சகட்ட பரபரப்பில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு..சிபிஐ கேவியட் மனுதாக்கல் - வீடியோ

    டெல்லி: நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு இரவே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தற்போது உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இத்தனை நாட்கள் இந்த வழக்கில் அடக்கி வாசித்த சிபிஐ தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்துள்ளது.

    நேற்று இரவு அவரின் வீட்டிற்கு அதிரடியாக சினிமா பாணியில் சென்ற சிபிஐ அவரை கைது செய்தது. இன்று அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    துரத்திக்கிட்டே இருப்பாங்க.. இதுதான் ஒரே வழி.. ப. சிதம்பரத்தின் கைதுக்கு பின் இப்படி ஒரு காரணமா? துரத்திக்கிட்டே இருப்பாங்க.. இதுதான் ஒரே வழி.. ப. சிதம்பரத்தின் கைதுக்கு பின் இப்படி ஒரு காரணமா?

    சோதனை

    சோதனை

    இந்தநிலையில் ப. சிதம்பரத்திற்கு நேற்று இரவோடு இரவாக மருத்துவ சோதனை செய்யப்பட்டது. இரண்டு சிறப்பு மருத்துவர்கள் ப. சிதம்பரத்தை சோதனை செய்தனர். சிபிஐ எப்போதும் இந்த நடைமுறையை கடைபிடிப்பது வழக்கம். பல்வேறு முக்கியமான காரணங்களை மனதில் வைத்து சிபிஐ இதுபோல் மருத்துவ சோதனை செய்து அதன் ரிப்போர்ட்டை தயாராக வைத்து இருக்கும்.

    காரணம் 1

    காரணம் 1

    முதல் விஷயம், ப. சிதம்பரம் மிக முக்கியமான அரசியல் தலைவர். அதேபோல் அவரது வயது காரணமாக உடலில் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இதனால் பாதுகாப்பு கருதி அவரது உடலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்ற சோதனை செய்துள்ளனர்.

    காரணம் 2

    காரணம் 2

    அதேபோல் கைது காரணமாக அவரின் ரத்த அழுத்தத்தில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டுள்ளதா, பிரச்சனை இருக்கிறதா என்றும் சோதனை செய்துள்ளனர். இந்த மருத்துவ சோதனைக்கான ரிப்போர்ட் நாளை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இது சிபிஐ தரப்பிற்கு இன்னொரு வகையிலும் சாதகமாக முடியும்.

    முக்கிய தலைவர்கள்

    முக்கிய தலைவர்கள்

    பொதுவாக இது போன்ற வழக்கில் கைதாகும் முக்கிய தலைவர்கள் உடல்நிலையை காரணம் காட்டி பெயில் கேட்பார்கள். அதை தடுக்கும் பொருட்டு முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை செய்து அதன் ரிப்போர்ட்டை கோர்ட்டில் சமர்ப்பணம் செய்தால் ஜாமீன் கிடைக்காது. இதனால்தான் ப. சிதம்பரத்திற்கு நேற்று இரவோடு இரவாக மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர்.

    English summary
    Inx Media Case: Why P Chidambaram underwent Medical checkup yesterday night?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X