சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. திகார் சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ப சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி வழங்கியதை அடுத்து சிறையில் உள்ள ப சிதம்பரத்திடம் அலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தியது
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் டெல்லி உள்ள திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தன்னை விடுவிக்க கோரி ப சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதனிடையே டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.
Delhi: Enforcement Directorate (ED) officials leave from Tihar Jail after interrogating Congress leader P Chidambaram. Yesterday, a special court had allowed 3 ED officials to interrogate P Chidambaram in INX media money laundering case. Currently, he is in judicial custody. pic.twitter.com/cKRI8QgOdc
— ANI (@ANI) October 16, 2019
இது தொடர்பாக நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், " சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் இன்று காலை 8.30 மணிக்கு மூன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று விசாரணை நடத்தாம். தேவை ஏற்பட்டால் ப சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யலாம். அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு விசாரணைக்கு தேவையான வசதிகளை டெல்லி திகார் சிறை காவல் கண்காணிப்பாளர் செய்து தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி இன்று காலை 8.30மணிக்கு டெல்லி திகார் சிறைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் ப சிதம்பரத்திடம் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் விசாரணை நடத்தினர். சற்றுமுன்பாக சிதம்பரத்திடம் விசாரணை நிறைவு பெற்றது.