டெல்லி போலீஸ் ஸ்பெசல் கமிஷ்னராக எஸ்என் ஸ்ரீவஸ்தவா உடனடியாக நியமனம்
டெல்லி: டெல்லி போலீஸ் ஸ்பெசல் கமிஷ்னராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்என் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக இது அமலுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. கர்தம்பூரி, சந்த் பாக், தயால்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களின் 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் வன்முறைகளும் போராட்டங்களும் நடந்த வருகிறது.
டெல்லியில் இரண்டு நாட்களாக நடந்து வரும் வன்முறையில் ர்தம்பூரி தலைமைக் காவலர் ரத்தன் லால், ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான், ஷாஹித் ஆல்வி உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை உயர்அதிகாரிகள் உள்பட சுமார் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
இதையடுத்து, வடகிழக்கு டெல்லியின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி போலீஸ் ஸ்பெசல் கமிஷ்னராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்என் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக இது அமலுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.