ரேஷன்ல்ல எக்ஸ்ட்ரா சக்கர தரலைனா சண்டை போடலாம்.. இதுக்கெல்லாமா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
Recommended Video
டெல்லி: ஏர் இந்திய விமானத்தில் விமான பைலட் மீது எச்சில் துப்பி நாராசமான வார்த்தைகளால் பேசி வெளிநாட்டு பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் குடிகார பெண் ஒருவர் அதிக மது போதையில் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அங்குள்ள பயணிகளுக்கு மது பரிமாறப்பட்டது.
அப்போது மதுபோதையில் இருந்த பெண் ஒருவர் இன்னும் கொஞ்சம் ஒயின் கேட்டுள்ளார். அதற்கு பணிப்பெண் தர மறுத்ததால் அவரிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் சமாதானம் செய்ய வந்த விமானியின் முகத்தில் எச்சில் துப்பி கெட்ட வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் அங்கிருந்தவர்களையும் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். கிட்டத்தட்ட ரவுடி போல் நடந்து கொண்ட அந்த பெண்ணின் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Irish lady behaves in such an abusive, racist way with @airindiain crew for being refused extra drinks. Very decent AI crew behaviour. Arrested on landing. Wonder if she should have been controlled onboard with handcuffs. @JitiBhargava @Mohan_Rngnathan pic.twitter.com/kSTDmGOEm5
— Tarun Shukla (@shukla_tarun) November 13, 2018
அந்த விமானம் லண்டன் சென்றடைந்ததும் அந்த பெண் கைது செய்யப்பட்டார். மற்றொரு வீடியோவில், அந்த பெண் "பாலஸ்தீன மக்களுக்கு உதவிய ஒரு "சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர்" என்று கத்தினார்.