ஜேடியூவில் பிரசாந்த் கிஷோர் பற்ற வைத்த நெருப்பு- குடியுரிமை மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
டெல்லி: குடியுரிமை மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) ஆதரவு தெரிவித்ததற்கு எதிராக அக்கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து லோக்சபாவில் ஜேடியூ வாக்களித்தது. இது கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கே எதிரானது அதன் தேசிய துணைத் தலைவரும் தேர்தல் வியூக வல்லுநருமான பிரசாந்த் கிஷோர் விமர்சித்திருந்தார்.
தற்போது ஜேடியூவில் பிரசாந்த் கிஷோர் கருத்துக்கு ஆதரவு வலுத்து வருகிறது. ஜேடியூ தேசிய பொதுச்செயலாளர் பவன் வர்மா இது குறித்து கூறியதாவது:
I urge Shri Nitish Kumar to reconsider support to the #CAB in the Rajya Sabha. The Bill is unconstitutional, discriminatory, and against the unity and harmony of the country, apart from being against the secular principles of the JDU. Gandhiji would have strongly disapproved it.
— Pavan K. Varma (@PavanK_Varma) December 10, 2019
ராஜ்யசபாவில் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரிக்கும் முடிவை கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.
நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பாரபட்சமான மசோதா. காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் நாம் இதனை நிச்சயம் ஏற்க முடியாது. மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு இம்மசோதா எதிரானது. இவ்வாறு பவன் வர்மா கூறியுள்ளார்.