ஆண்டுக்கு 4 கட்டங்களாக ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள்; பிப்.23- பிப். 26-ல் முதல் கட்ட தேர்வு
டெல்லி: நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளுக்காக உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு 4 கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். மேலும் முதல் கட்ட தேர்வு பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை நடத்தப்படும் என்றும் பொக்ரியால் கூறினார்.
ஜேஇஇ தேர்வுகளை நடத்தும் என்டிஏ எனப்படும் ஏஜென்சி நேற்று தேர்வுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு அறிவிப்புகள் நீக்கப்பட்டன.
டிஎன்பிசிஎஸ்சி குரூப்-1 தேர்வுகள் ஜனவரி 3-ல் நடைபெறும்; செம்ப்டம்பரில் குரூப் 4 விஏஓ தேர்வுகள்!
இதனைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டார். இது தொடர்பாக பொக்ரியால் கூறுகையில், ஜேஇஇ தேர்வுகள் ஆண்டு முழுவதும் 4 கட்டங்களாக நடைபெறும்.
We have examined your suggestions regarding JEE (Mains) and on the basis of the same, I am announcing the schedule of the exam. @SanjayDhotreMP @EduMinOfIndia @PIB_India @MIB_India @DDNewslive @mygovindia https://t.co/yKUwnQRXlw
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) December 16, 2020
முதல் கட்டமாக பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26ந் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றார். பின்னர் மார்ச், ஏப்ரல், மே மாதங்களிலும் இந்த ஜேஇஇ தேர்வு ழுதலாம். ஒரு மாணவர் 4 முறையும் தேர்வுகளை எழுதலாம் என்றும் பொக்ரியால் தெரிவித்தார்.
ஜேஇஇ தேர்வுகளுக்கு
என்ற இணையதளத்தில் இன்று முதலே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பாண்டில் தமிழ் உட்பட 13 மொழிகளில் ஜேஇஇ தேர்வுகள் எழுதலாம்.