மாணவர்கள் போராட்டம் எதிரொலி- கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற்றது ஜே.என்.யூ
Recommended Video
JNU Protest | விடாமல் போராடும் மாணவர்கள்... ஜேஎன்யூ போராட்டத்திற்கு காரணம் என்ன ?
டெல்லி: மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக கல்வி கட்டண உயர்வில் 50% திரும்பப் பெற்றது டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழக நிர்வாகம்.
டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தில் விடுதி கட்டண உயர்வு 300% அதிகரிக்கப்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த சில வாரங்களாக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இன்றும் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கல்வி கட்டண உயர்வில் 50% குறைப்பதாக ஜே.என்.யூ. நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையிலான பொருளாதார உதவி திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய கல்வித்துறை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
English summary
Delhi JNU today announced that the major roll back in the hostel Fee.