சிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட கேள்வியை சொல்லி கபில் சிபல் வாதம்.. நீதிமன்றத்தில் சிரிப்பலை..
Recommended Video
டெல்லி: சிபிஐ காவலில் சிதம்பரத்திடம் உங்களுக்கு டுவிட்டர் கணக்கு உள்ளதா என்றொல்லாம் கேட்டுள்ளார்கள் என வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
ப சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபரப்பாக நடந்தது.
அப்போது ப சிதம்பரம் சார்பில் ஆஜரான கபில் சிபல் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆகியோரிடையே பரபரப்பான விவாதம் நடந்தது.
இன்று மாலை விடுதலை ஆவாரா ப. சிதம்பரம்? சிபிஐ கோர்ட்டில் தனி விசாரணை தொடங்கியது!
நேற்று விவாதம் நடந்திருக்கு
கபில் சிபல் வாதிடுகையில், அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கொடுக்க வேண்டிய ஆவணங்களை ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ளது. இதை வைத்து நேற்று தொலைகாட்சிகளில் விவாதம் நடந்தது.இன்று நாளிதழ்கள் செய்திகள் வந்துள்ளது என்றார்.
துஷார் மேத்தா மறுப்பு
அப்போது குறுக்கிட்ட அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா எந்த ஆவணங்களையும் நாங்கள் கசியவிடவில்லை என்றார்.
ஆதாரத்தை வெளியிட முடியுமா
தொடர்ந்து பேசிய கபில் சிபல் "வழக்கில் தொடர்புடையதாக ஒரு வங்கி கணக்கையோ, இந்த வழக்கில் பெற்ற ஆதாயத்தை கொண்டு சிதம்பரம் சேர்த்ததாக ஒரு சொத்து குறித்து ஒரே ஒரு ஆதாரத்தை அமலாக்கத்துறை வெளியிடமுடியுமா? சிதம்பரத்தின் பெயரில் ஒரு சொத்தை இவர்கள் காட்டட்டும் நான் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்" என்றார்.
இது என்ன சம்பந்தம்
அப்போது அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஸார் மேத்தா சிதம்பரத்திற்கு கணக்கு உள்ளது என்றார். அதற்கு கபில் சிபல், ஆமாம் டுவிட்டரில் கணக்கு உள்ளது. இதை நான் சொல்லவில்லை. சிபிஐ காவலில் உள்ள சிதம்பரத்திடம் உங்களுக்கு டுவிட்டர் கணக்கு உள்ளதா என கேட்டுள்ளனர். வங்கி கணக்கிற்கும் டுவிட்டர் கணக்கிற்கும் என்ன சம்மந்தம் என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார். அப்போது நீதமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.