கர்நாடகா: தகுதி நீக்கத்தை எதிர்த்து 3 எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி: தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து 3 கர்நாடகா எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காத ஜேடிஎஸ்-காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மொத்தம் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.
இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ ஜார்கோலி உள்ளிட்ட 3 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீதான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
ஈழத் தமிழர் பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள் - 8 ராணுவத்தினர் பலி- இலங்கை அரசு ஷாக்!
அப்போது எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீது சபாநாயகர் எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம் என கூறியது. அதேநேரத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏக்களை சபைக்கு வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது; கொறடா உத்தரவு அவர்களுக்கு பொருந்தாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் சபாநாயகர் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.