குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சிறுத்தை... எல்லாம் பசிக்கொடுமை.. வேறென்னத்தச் சொல்ல..!
குழம்பிய குட்டையில் சிறுத்தை ஒன்று மீன் பிடிக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
டெல்லி: சிறுத்தை ஒன்று குட்டையில் மீன் பிடிக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Recommended Video
காட்டுக்குள் வாழும் சிறுத்தைகள் பொதுவாக மான், எருமை, வரையாடு போன்றவைகளைத்தான் வேட்டையாடி உண்ணும். அதுபோன்ற உணவுகள் தான் அதற்கு பசியாற்றும். எனவே சிறுத்தைகள் வேறு சிறு பிராணிகளை வேட்டையாடி சாப்பிட்டதாக இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்.
ஆனால் அந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில், சிறுத்தை ஒன்று மீன் பிடித்து சாப்பிடும் வீடியோ டிவிட்டரில் வைரலாகியுள்ளது. வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், சிறுத்தை ஒன்று குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது பதிவாகியுள்ளது.
Nisarga: வாகன போக்குவரத்து நிறுத்தம்.. 7 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்.. மக்களுக்கு எச்சரிக்கை
மீன் பிடிக்கும் சிறுத்தை
காட்டுக்குள் இருக்கும் சிறு குட்டைக்கு மிக அருகில் வந்து நிற்கிறது அந்த சிறுத்தை. குழம்பிய அந்த குட்டையில் மீன்கள் துள்ளி குதித்துக்கொண்டிருக்கின்றன. சில விநாடிகள் நோட்டமிடும் சிறுத்தை, குட்டைக்குள் பாய்ந்து ஒரு மீனை லாவகமாக வாயில் கவ்விக்கொண்டு வெளியேறுகிறது.
மாற்று உணவு
"ஒரு சிறுத்தை மீன் பிடிக்கிறது. இந்த பூனை (சிறுத்தை) எதை வேண்டுமானாலும் உண்ணும் போல் தெரிகிறது. சூழலுக்கு தகுந்த மாதிரி தன்னை தானே மாற்றிக்கொண்டிருக்கிறது", வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பசி வந்தால்...
உண்மை தான். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அதுபோல் தான் இந்த சிறுத்தை தனது பசியை போக்க ஏதாவது ஒன்று கிடைத்தால் போதும் என நினைத்து மீன் பிடித்து உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வைரலான வீடியோ
பர்வீன் கஸ்கான் பகிர்ந்துள்ள இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது. சிறுத்தை மீன் பிடிக்கும் அதிசயத்தை பார்த்து பலரும் புருவம் உயர்த்தி வருகின்றனர். அந்த சிறுத்தையின் மீன் பிடிக்கும் ஆற்றலை நெட்டிசன்கள் பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.
இது புதிதல்ல
ஆனால் இது ஒன்றும் புதிதல்ல என்கின்றனர் சில நெட்டிசன்கள். புலி, சிறுத்தை, சிங்கம் உள்ளிட்ட மிருகங்கள் தங்களுக்கு ஏற்ற உணவு கிடைக்காத சமயத்தில், மீன் பிடித்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று தான் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.