லாக்டவுன் 4.0.. அனைத்து மண்டலங்களிலும் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அனுமதி.. கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர!
புதிய லாக்டவுன் 4.0 மூலம் நாடு முழுக்க ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: புதிய லாக்டவுன் 4.0 மூலம் நாடு முழுக்க ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியா முழுக்க மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விவரங்களை வெளியிட்டுள்ளது. மூன்று லாக்டவுன்களை தொடர்ந்து நாடு முழுக்க லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதிய லாக்டவுன் 4.0 மூலம் நாடு முழுக்க ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மண்டலங்களிலும் இந்தியாவில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க முடியும். அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி மற்ற பொருட்களையும் ஆன்லைன் மூலம் வாங்க முடியும்.
இதற்கு முன் லாக்டவுன் 3.0ல் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது சிவப்பு மண்டலத்திலும் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளிப் கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி போன்கள், லேப்டாப் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களையும் வாங்கலாம்.
Cyclone Amphan: ஆம்பன் புயல் எதிரொலி.. இரவோடு பெங்களூரில் வெளுக்கும் மழை
ஆனால் நாடு முழுக்க இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்போதும் போல ஆன்லைன் ஷாப்பிங்களுக்கு அனுமதி இல்லை. கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கும்.