லோக்சபா தேர்தல்.. 3ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.. 64.66% வாக்குப்பதிவு!
லோக்சபா தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 116 தொகுதிகளில் இன்று நடந்தது.
டெல்லி: லோக்சபா தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 116 தொகுதிகளில் இன்று நடந்தது. இதில் 64.66% வாக்குகள் பதிவாகி உள்ளது.
நாடு முழுக்க முதல் இரண்டு கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று மூன்றாவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது.
முதல் இரண்டு கட்ட தேர்தலை போலவே இதிலும் வாக்குப்பதிவு சீரான வேகத்தில் நடந்தது. கேரளாவில் மக்கள் அதிகளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Video: மீண்டு வந்த தேவன்.. ஈஸ்டர் பண்டிகையின் மகத்துவம்.. அமெரிக்க கொண்டாட்டம் எப்படி!
எங்கு நடந்தது
கேரள மாநிலத்தில் 20 தொகுதிகள், குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கோவாவில் உள்ள 2 தொகுதிகள், கர்நாடகத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 5 தொகுதிகள், அசாமில் 4 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், சத்தீஷ்கர் மாநிலத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.
வேறு எங்கு
அதேபோல் ஒடிசாவில் 6 தொகுதிகள். இதில் ஒடிசா சட்டசபை தேர்தலும் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடந்தது. உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகள், காஷ்மீரில் 1 தொகுதி, திரிபுராவில் 1 தொகுதியில் தேர்தல் நடந்தது. இதில் மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட இடங்களில் சில பகுதிகளில் கலவரம் நடந்தது.
என்ன கோளாறு
பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது. அதேபோல் கேரளாவில் மழை காரணமாக சில இடங்களில் வாக்குப்பதிவு தடைபட்டது.மேற்கு வங்கத்தில் கலவரம் காரணமாக சில இடங்களில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
சதவிகிதம் என்ன
3ம் கட்ட தேர்தலில் இதில் 64.66% வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநில வாரியான வாக்குப்பதிவு சதவிகிதம் பின்வருமாறு:
அசாம்- 78.29% , பீகார்- 59.97% , கோவா- 71.09% , குஜராத்- 60.21%, ஜம்மு & காஷ்மீர்- 12.86%, கர்நாடகா - 64.14%, கேரளா- 70.21%, மஹாராஷ்டிரா- 56.57%, ஒடிசா- 58.18%, திரிபுரா- 78.52%, உத்தர பிரதேசம்- 57.74%, மேற்கு வங்கம் - 79.36, சட்டீஸ்கர்- 65.91%, தத்ரா& நாகர் - 71.43% மற்றும் டாமன் & டையூ- 65.34%. வாக்குகள் பதிவானது.