தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Recommended Video
டெல்லி: மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், குஜராத், கோவா, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, உத்தரகண்ட், டெல்லி, புதுச்சேரி, சண்டிகர் உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் என்றும்,
வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் - மார்ச் 26:
மனு பரிசீலனை - மார்ச் 27
இறுதிப்பட்டியல் வெளியீடு - மார்ச் 29 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்.. தமிழகத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு!
மேலும், அஸ்ஸாம், சத்தீஸ்கரில் மூன்று கட்டங்களாகவும், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு நான்கு கட்டங்களாகவும், ஜம்மு & காஷ்மீரில் ஐந்து கட்டங்களாகவும், பீகார், உத்திரப் பிரதேசம், வங்காளம் ஆகியவற்றில்ஏழு கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளன.
- முதல் கட்ட தேர்தல் - 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகள்
- 2 -ம் கட்ட தேர்தல் -13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகள்
- 3 -ம் கட்ட தேர்தல் -14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகள்
- 4 -ம் கட்ட தேர்தல் - 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலை தளங்களில் செய்யப்படும் பிரச்சாரமும் தணிக்கை செய்யப்படும் என்றும்1950 என்ற எண்ணுக்கு அழைத்து தேர்தல் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது