கேஸ் சிலிண்டர் விலை உயர்வு.. சென்னையில் இனி மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ. 620
டெல்லி: சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இனி சென்னையில் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ 620-க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கேஸ் சிலிண்டரின் விலையை மாதம் ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் ஆரம்கோ எண்ணெய் வயலில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு சர்வதேச சந்தையில் சவுதி அரேபியா அரசின் கச்சா எண்ணெய் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
டீசல் விலை
இதனால் பெட்ரோலிய பொருட்களும் முன்பு போல் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது கேஸ் சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளது.
சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை
அக்டோபர் மாதத்துக்கான கேஸ் சிலிண்டரின் விலை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முந்தைய மாதத்தை காட்டிலும் விலை அதிகமாகவே உயர்ந்திருக்கிறது. சென்னையில் கடந்த மாதம் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ606.50-க்கு விற்பனையானது.
கேஸ் சிலிண்டர்
சிலிண்டருக்கு ரூ.13.50 அதிகரித்துள்ளது. இதனால் தற்போது அது ரூ 620-ஆக உயர்ந்திருக்கிறது. கமர்சியலுக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ.1,174.50-ஆக இருந்தது. தற்போது அது ரூ.24.50-ஆக உயர்ந்துள்ளது.
வாடிக்கையாளர் கணக்கு
இனி வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,199 ஆகும். சென்னையில் கடந்த மாதம் மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலை ரூ. 693.69-க்கும் விற்பனையானது. மானியமாக வாடிக்கையாளர் கணக்கில் ரூ. 87.19 செலுத்தப்பட்டது. இனி ரூ100.69 வரவு வைக்கப்படும்.
விற்பனை
டெல்லியில் மானியமில்லா சிலிண்டர் ரூ. 590, கொல்கத்தாவில் ரூ 616.50, மும்பையில் ரூ 562 ஆகிய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது அவை முறையே ரூ,15, ரூ,13.50, ரூ.12.50 ஆகிய விலைக்கு உயர்த்தப்பட்டு வருகிறது.