டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மே 23... நெருங்கும் உச்சகட்ட கிளைமாக்ஸான 'அரசியலின் ஜீரோ அவர்'.. என்ன செய்வார் ஜனாதிபதி?

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதை புறக்கணிக்கும் மம்தா பானர்ஜி, அகிலேஷ், மாயாவதி- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் தொங்கு நாடாளுமன்றத்தைத் உருவாகும் என கணிகத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ளப் போகிறார் என்பதை நாடு உற்றுநோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது.

    லோக்சபா தேர்தலில் பாஜக பிரசாரம் என்பது மோடி என்கிற ஒற்றை மனிதரை முன்வைத்துதான் மேற்கொள்ளப்பட்டது. மோடியின் திட்டங்கள் வென்றால் அவருக்கு மிகப் பெரிய வெற்றி. அதே நேரத்தில் தோல்வி அடைந்தால் நிச்சயம் மோடிக்குத்தான் அது வீழ்ச்சி.

    தற்போதைய சூழலில் மத்தியில் அமையப் போவது கூட்டாட்சியாகத்தான் இருக்கும் என்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன. மோடியே மீண்டும் பிரதமரானால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மிகக் குறைவான வேலைகள்தான் காத்திருக்கும்.

    அரசியலுக்காக கட்டிய மனைவியையே உதறிய இவர் எப்படி மற்ற பெண்களை மதிப்பார்.. மோடி மீது மாயாவதி தாக்கு அரசியலுக்காக கட்டிய மனைவியையே உதறிய இவர் எப்படி மற்ற பெண்களை மதிப்பார்.. மோடி மீது மாயாவதி தாக்கு

    மோடி ஜெயித்தால் உடனே பிரதமர்

    மோடி ஜெயித்தால் உடனே பிரதமர்

    மோடி வென்றால் அதிகபட்சமாக தேர்தல் முடிவுகள் வெளியான 4 மணி நேரத்துக்குள் பிரதமர் மோடியை அவரால் பதவியேற்க செய்ய முடியும். ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும்.

    மே 26-ல் பிரதமர் பதவி ஏற்பு

    மே 26-ல் பிரதமர் பதவி ஏற்பு

    பொதுவாக தலைமை தேர்தல் ஆணையர் முழுமையான தேர்தல் முடிவுகளை மே 23-ந் தேதி ஜனாதிபதி மாளிகைக்கு தெரிவிப்பார். மே 26-ந் தேதியன்று புதிய பிரதமர் பதவியேற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் மே 26-ல் தான் பிரதமராக மோடி பதவியேற்றார்,

    அரசியல் ஜீரோ அவர்

    அரசியல் ஜீரோ அவர்

    அதாவது அரசியலின் ஜீரோ அவர் என்பதாக இதுதான் அழைக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் முடிவுகளை வெளியிடும் நேரம் முதல் அடுத்த பிரதமர் பதவி ஏற்கும் வரையிலான காலம்தான் அரசியலில் ஜீரோ அவர். இந்த கால கட்டத்தில் ஜனாதிபதி யாருடனும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம். ஆனால் யாருடைய முடிவுக்கும் அவர் கட்டுப்பட வேன்டியவர் அல்ல.

    சங்கர் தயாள் சர்மா நிலை

    சங்கர் தயாள் சர்மா நிலை

    1996-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சங்கர்தயாள் சர்மா, தனிப்பெரும் கட்சியாக இருந்த ஒரே காரணத்துக்காக- பெரும்பான்மை இல்லாத போதும் வாஜ்பாயை பிரதமராக பதவி ஏற்க அழைத்தார். ஆனால் அந்த அரசு 13 நாட்கள் மட்டும்தான் நீடித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசு தோல்வியை தழுவியதால் ஆட்சி கவிழ்ந்தது. ஆனால் கே.ஆர். நாராயணன் ஜனாதிபதியாக இருந்த போது மிக்த் தெளிவாக ஆட்சி அமைக்கப் போவதற்கு யார் யார் ஆதரவு தருகிறார்கள் என கடிதங்களை வாங்கி வைத்துக்கொண்டுதான் முடிவெடுத்தார். அதேபோல் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்தபோதும் தெளிவான ஒரு முடிவை எடுத்தார்.

    ராஜீவ் நிலை

    ராஜீவ் நிலை

    1989-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 197 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால் பெரும்பான்மைக்கு போதுமான இடங்கள் இல்லை. அதனால் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் எதிர்க்கட்சி வரிசையில் அமருவதாகவும் ராஜீவ்காந்தி அறிவித்ததால் தேசிய முன்னணியின் வி.பி.சிங் பிரதமரானார் என்பது வரலாறு. இப்போது தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் என்கிற நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பதை நாடே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

    English summary
    Nation's next Prime Minister should be sworn in by May 26, the day the present incumbent took the oath five years ago.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X