இரவு தொடங்கிய ஓநாய் சந்திரகிரகணம் இன்று அதிகாலை வரை நீடிப்பு.. 2020ன் முதல் கிரகணம் இது!
Recommended Video
டெல்லி: 2020-ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் நேற்று இரவு 10.37 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.42 மணி வரை நீடித்தது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்ச்சியே சந்திரகிரகணம் என அழைக்கப்படுகிறது. பூமியின் வெளிப்புற நிழல் மட்டுமே சந்திரனில் விழும் பெனும்ப்ரல் சந்திரகிரகணம் நேற்று இரவு 10.37 மணிக்கு தொடங்கியது.
இந்த கிரகணம் 4 மணி நேரம் 5 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. அதாவது இன்று அதிகாலை 2.42 மணிக்கு முடிவடைந்தது. இந்த கிரகணத்தை அனைத்து மக்களும் வெறும் கண்களால் பார்க்க முடிந்தது. இதனால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதோடு ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த சந்திர கிரகணம் தெரிந்தது. இந்த ஆண்டில் மொத்தம் 4 சந்திரகிரகணங்கள் நிகழவுள்ளது. சந்திர கிரகணத்தால் பூமியிலிருந்து விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு மங்கிய நிலையில் காணப்படும். இதுதான் ஓநாய் சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
ஓமனை வறுமையிலிருந்து மீட்ட.. மன்னர் சுல்தான் காபூஸ்.. 79 வயதில் மரணம்
இதற்கு நாசா பெயரிட்டது. நேற்று இரவு 90 சதவீத நிலவு பூமியால் மறைக்கப்பட்டது. இதையடுத்து நிலவு சிகப்பு நிறத்தில் காணப்பட்டது. அடுத்த சந்திரகிரகணம் ஜூன் 5, 6 ஆம் தேதிகளில் ஏற்படும். இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் என்பதால் மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.