அடுத்து என்ன? குடியரசுத் தலைவர் ஆட்சியா? முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மகாராஷ்டிரா ஆளுநர்!
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகிவிட்டதால் தற்போது அங்கு ஆளுநர் என்ன முடிவை எடுப்பார் என்று கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகிவிட்டதால் தற்போது அங்கு ஆளுநர் என்ன முடிவை எடுப்பார் என்று கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு வாரம் ஆகியும் இன்னும் அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.
அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. அங்கு சிவசேனாவுடன் நடந்த மோதலால் தற்போது பாஜக அரசு தனது அமைச்சரவையை கலைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் திருப்பம்.. சரத் பவாருடன் பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு..புது கூட்டணியா?
இல்லை
மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றதால், அந்த கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவசேனா தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்டது. முதல்வர் பதவி இரண்டரை ஆண்டுகளுக்கு வேண்டும் என்று சிவசேனா கேட்டது.
தொடர் சண்டை
இதற்கு பாஜக ஒப்புக்கொள்ளாமல் இருந்தது. இதனால் பாஜக சிவசேனா இடையே பிரச்சனை உருவானது. இவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை எல்லாம் தோல்வியில் முடிந்தது. பாஜக கண்டிப்பாக முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சிவசேனா உறுதியாக இருந்தது.
என்ன திருப்பம்
இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக மகாராஷ்டிராவில் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகி உள்ளார். நாளையோடு அவரின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் ராஜினாமா செய்தார். அதோடு மகாராஷ்டிராவில் மொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளது.
முடிவு எடுப்பார்
இந்த நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் காபந்து முதல்வராகவும் நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். அங்கு கூட்டணியை கைகூடவில்லை. அதனால் தற்போது மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் என்ன முடிவு எடுப்பார் என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதிக இடங்களை வென்ற தனி கட்சி என்று பாஜகவை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க சொல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவசரம்
இல்லையென்றால் நேரடியாக குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இன்னும் சில தினங்களில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அதனால் பெரும்பாலும் அதற்கு முன் அம்மாநில ஆளுநர் பகத் சிங் முக்கிய முடிவை எடுப்பார் என்று கூறுகிறார்கள்.