மகாத்மா காந்தி பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர்.. வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி: மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மகாத்மா காந்தி பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் என உச்ச நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை மகாத்மா காந்திக்கு வழங்குமாறு மத்திய அரசுக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று வெள்ளிக்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்கே பாப்டே, "மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை. அவர் பாரத ரத்னா விருதை விட உயர்த்தவர்" என்று கருத்து தெரிவித்ததுடன், பாரத ரத்னா விருது கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்ததுடன் மனுவை தள்ளுபடி செய்தார்.
சென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலம் எம்.பி.க்கு பதவி...! புதிய சர்ச்சை
விருது தொடர்பாக மனுதாரர் மத்திய அரசிடம் தான் முறையிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார்.